அரைச்ச மாவை அரைக்கிறதுக்கு எண்டு கார்டு போடலாம் என பாக்கியலட்சுமி சீரியலை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ஆரம்பத்தில் விறுவிறுப்பான கதை களத்துடன் ஒளிபரப்பாகி வந்த சீரியல் கடந்த சில மாதங்களாகவே ஜவ்வு போல் இழுத்து வருகின்றனர்.

கதையே இல்லாமல் செழியனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு, அமிர்தாவின் செத்து போன கணவர் கணேஷின் கணவரின் என்ட்ரி என தொடர்ந்து தடம் மாறி தடுமாறி பயணித்து வருகிறது.

ஏற்கனவே செழியனால் ராதிகா பேக்கை தூக்கிக்கொண்டு பாக்யா வீட்டிற்கு வந்து பல்பு வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு இருவரும் வெளியேறிய நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமா வீடியோவில் ஏற்கனவே ஈஸ்வரி கோபி கூட்டி வந்து வீட்டில் வைத்திருக்க தற்போது ராதிகா கோபி இல்லாமல் நான் வரமாட்டேன் என்று பேக்குடன் வந்து பாக்யாவின் வீட்டிற்குள் நுழைகிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் திரும்பவும் முதல்ல இருந்தா? ஏற்கனவே ராதிகா பல்பு வாங்கிட்டு வெளியே போனது மறந்துட்டீங்களா? மேலும் இப்போது அது கோபி வீடு கூட கிடையாது, பாக்கியா பெயரில் இருக்கும் வீடு.. இப்படி அரைச்ச மாவையே திரும்பத் திரும்ப அறைக்கிறதுக்கு இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போடலாம். வர வர சீரியல் பார்க்கவே பிடிக்கல என பலரும் கருத்து கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.