சந்திரமுகி 2 படம் பற்றி கீரவாணி ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ராகவா லாரன்ஸை வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்கி உள்ளார்.
விநாயகர் சதுர்த்தி தின ஸ்பெஷலாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் இந்த படத்துக்கு இசையமைத்துள்ள கீரவாணி படம் பற்றிய முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
அதாவது, பிரபலங்கள் ஒவ்வொருவரும் 2 மாதம் இரவு பகலாக தூங்காமல் தங்கள் கதாபாத்திரத்தின் மூலம் மரண பயத்தை காட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளார். காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.