பாண்டியன் ஸ்டோர் சீரியல் குறித்து பதிவு செய்துள்ளார் ஹேமா சதீஷ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தின் மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
கதை இல்லாமல் நீண்ட நாட்களாக சீரியல் ஜவ்வு போல் இழுத்து வருவதால் எப்போதுதான் முடிப்பீங்க என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.
இப்படியான நிலையில் இவர்கள் புது வீட்டிற்கு குடியேறும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது. வீட்டிற்கு தனலட்சுமி வீடு என பெயர் வைக்கப்பட்டிருந்தது.
எல்லோரும் புது வீட்டுக்கு குடியேறி இருந்தால் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படியான நிலையில் மீனாவாக நடித்து வரும் ஹேமா சதீஷ் சிறப்பு புகைப்படங்கள் வெளியிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வருகிறதா என கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வருவது உறுதி என கூறி வருகின்றனர். தயவுசெய்து பார்ட் 2 மட்டும் வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.