ஈஸ்வரியை அவமானப்படுத்தி உள்ளார் விசாலாட்சி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, ஜனனியின் அப்பா வீட்டுக்கு வர அவர் ஜனனியிடம் எதுவும் பேசாமல் என் வீட்ல ஒரு விசேஷம், அதான் சம்மந்தியை அழைக்க வந்தேன் என்று சொல்கிறார்.
அதனை தொடர்ந்து ஸ்டேஷனில் குணசேகரன் இல்லை என லாயர் சொல்ல கதிர் கோபம் அடைகிறார். இதோ தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரி உங்க புள்ளைக்கு தான் அறிவில்லை என சொல்ல விசாலாட்சி அப்போ அந்த ஜீவானந்தம் அறிவாளியா என கேட்டு அசிங்கப்படுத்துகிறார்.