குணசேகரன் அடுத்தடுத்து அவமானப்பட நந்தினி சரியான பதிலடி கொடுக்கின்றார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இறுதியாக குணசேகரன் எஸ் கே ஆர் குடும்பத்திற்கு கதிர் பெயரில் இருக்கும் பாக்டரியை எழுதி வைக்க முடிவு செய்த நிலையில் இதற்கு கதிர் எதிர்ப்பு தெரிவிக்க என்னமோ நீ கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்தின கம்பெனி மாதிரி பேசுற என குணசேகரன் தனது சுய ரூபத்தை காட்ட கதிர் கையெடுத்து கும்பிட்டான்.

இதையடுத்து இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வேண்டும். அதாவது குணசேகரன் காரில் போகும்போது கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி என இருவரும் காரை வழிமறிக்க என்ன ரோட்ல கார வழி மறைச்சிட்டு இருக்கீங்க என கேட்க ரோடா இருக்குன்னு பேசாம இருக்கேன் என ஜான்சி ராணி ஷாக் கொடுக்கிறார்.

அடுத்து வீட்டுக்கு வந்ததும் ஜனனி குணசேகரன் ரூம் கதவை தட்ட ஆதிரை கல்யாணம் ஆச்சேன்னு பேசாம இருக்கேன் என குணசேகரன் சொல்ல யாரோட கல்யாணம் என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு குணசேகரன் நந்தினியிடம் போய் உன் புருஷனை கூட்டிட்டு வாமா என சொல்ல முடியாது என பதிலடி கொடுக்கிறார். இதனால் குணசேகரன் ஆளாளுக்கு இந்த வீட்டில் மரியாதை குறைஞ்சுகிட்டே போகுது என பேசுகிறார். இதனால் இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.