வளவன் வீட்டுக்கு வர பதற்றத்தில் பக்கவாதத்தையே மறந்துள்ளார் குணசேகரன்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ஜனனி, ஈஸ்வரி, நந்தினி மற்றும் ரேணுகா என நான்கு பேரும் சேர்ந்து ஜீவானந்தத்தை சந்திக்க சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஜீவானந்தத்திடம் அவ பொண்ணு அனாதையானது அவர் மனைவி இறந்து போனதைப் பற்றி எல்லாம் பேசி பரிதாபப்படுவது போல நடந்து கொள்ளாதீர்கள். அதனால் நமக்கு கிடைக்க வேண்டிய உதவி கூட கிடைக்காமல் போகலாம் என்று ஜனனி அறிவுரை கூறுகிறார்.

மறுபக்கம் குணசேகரன் ஏற்பாடு செய்த ரவுடி வளவன் நேராக வீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். வளவனை பார்த்த பதற்றத்தில் குணசேகரன் பக்கவாதம் வந்ததையே மறந்து போய்விட்டார். வளவன் போடும் சத்தத்தை கேட்டு விசாலாட்சி யாருப்பா அவரு என கேள்வி கேட்கிறார்.