ஜனனி உட்பட மருமகள்கள் எல்லோரும் வீட்டை விட்டு வெளியேற குணசேகரன் தேடி ஆப்பு வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் குணசேகரன் ஜனனி தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட வேண்டும் என சொல்ல கதிர் ஜனனியை அடிக்க பாய சக்தி கதிரை அறிந்து இனி என் பொண்டாட்டி நல்ல யார் கைய வச்சாலும் சும்மா இருக்க மாட்டேன் என சத்தம் போட்டார்.
மேலும் இனிமேலும் இந்த வீட்ல இருக்க போறது இல்ல என சொல்லிய நிலையில் இன்றைய எபிசோட் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜனனி இனி மேலும் இங்கு இருக்க வேண்டாம் என சொல்லி கிளம்ப கூடவே ரேணுகா நந்தினி உள்ளிட்டோரும் கிளம்பி செல்கின்றனர். குணசேகரன் எல்லாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டு நிம்மதியாக இருக்க ஆடிட்டர் ஒரு ஆப்பு ஒன்றை வைத்துள்ளார்.
உங்க பாட்டி பட்டம்மாள் சொத்துக்கும் இந்த வீட்டு மருமகளுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு என்று சொல்ல குணசேகரன் இப்ப தானே அவங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினேன் என்று சொல்கிறார். உடனே ஆடிட்டர் தப்பு பண்ணிட்டீங்களே சார் என்று ஷாக் கொடுக்கிறார்.