
குடும்ப பெண்களுக்கு குணசேகரன் போட்ட ஆர்டரால் கலங்கியுள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி, ரேணுகா ஆகியோர் கதிர் மற்றும் ஞானத்திற்கு பதிலடி கொடுத்த நிலையில் இன்று குணசேகரன் குடும்ப பெண்களிடம் தேவையில்லாமல் பேசுவதை விட்டுவிட்டு அந்த அப்பத்தா கிட்ட போயி சொத்தை எழுதி வாங்கிட்டு வர வேலையை பாருங்க என்று அனுப்பி வைக்கிறார்.
வீட்டை விட்டு வெளியே வந்த நான்கு மருமகள்களும் ஓரிடத்தில் நின்று பேசும்போது ஈஸ்வரி அந்த ஜீவானந்தத்திற்கு என்ன சம்பந்தப்பட்ட ஆளால இப்படி ஒரு பிரச்சனை வரும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என வருத்தப்படுகிறார்.
