தூக்கத்தில் அலறி எழுந்து ஒப்பாரி வைக்கிறார் குணசேகரன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் 40% ஷேர் ஜீவானந்தம் கைக்கு சென்றதை தொடர்ந்து குணசேகரன் போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் கொடுக்க முயற்சி செய்தும் ஒன்னும் முடியாமல் போய்விட்டது.
இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த குணசேகரன் அழுது டிராமா போட்டு புலம்பியதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் தூங்கிக் கொண்டிருக்கும் குணசேகரன் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டு அலறி எழுந்து ஆர்ப்பாட்டம் செய்ய தம்பிகள் எல்லோரும் நாங்கள் இருக்கோம் பயப்படாதீங்க என ஆறுதல் கூறுகின்றனர். இதைப் பார்த்து நந்தினி இங்கதான் வீர வசனம் பேசுறது அங்க போய் அடி வாங்கிட்டு வரது என நக்கல் அடிக்கிறார்.
இன்னொரு பக்கம் சிங்கம் மாதிரி இருந்தீங்களே மாமா, இப்படி உங்கள சிதைச்சு உட்கார வைத்து விட்டார்களே என கரிகாலன் கலாய்க்கிறார். அதன் பிறகு குணசேகரன் அழுதுக் கொண்டே பாட்டு பாடி ஒப்பாரி வைக்க அதை பார்த்து வீட்டுப் பெண்கள் எல்லோரும் சிரிக்கின்றனர்.
இதனால் இன்றைய எதிர்நீச்சல் சீரியல் செம ஃபன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.