ஒன்னு நீ மாறு இல்லனா என்னை மாற விடுயா என குணசேகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கதிர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கதிர் குணசேகரனுக்கு ஒரு அரை விட அதே வார்த்தையை நான் சொல்லி இருந்தா என்னையும் அடிப்பியா என குணசேகரன் கேட்க கதிர் யோவ் ஒண்ணு நீ மாறு இல்லனா என்னையாச்சும் மாற விடுயா என அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிறகு ஜனனி, நந்தினி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் குணசேகரனை தேடி வீட்டுக்கு வர வெண்பாவுடன் வெளியே சென்று இருப்பதாக சொல்கின்றனர். அடுத்து விசாலாட்சி கையில் பெரிய அருவாளுடன் வெளியே வந்து பெரியவனே இனிமேல் அவங்க நமக்கே வேண்டாம் என கூறுகிறார்.