எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டிடறேன் என பொங்கி எழுந்துள்ளார் குணசேகரன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அப்பத்தா ஒரு வழியாக கண் விழித்த நிலையில் குணசேகரன் பேசு பேசு என உட்கார்ந்து கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இது குறித்து வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் ஜீவானந்தம் தன்னுடைய மகள் மற்றும் மனைவியை சந்திக்க அவரது மனைவி கயல்விழி வெண்பாவை நினைச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அவ உங்களை ரொம்ப மிஸ் பண்றா என்று பேசுகிறார்.
மறுபக்கம் குணசேகரன் எல்லா பொம்பளைங்களும் கிரிமினல் கிரிமினல்களுக்கு மத்தியில ரொம்ப கஷ்டமா இருக்கு. 80 வயசு கிழவிக்கும் பயப்பட வேண்டியதாயிருக்கு எட்டு வயசு தாராவுக்கும் பயப்பட வேண்டியதாயிருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன் என்று பொங்குகிறார்.