அப்பத்தா கொடுத்த அதிரடியால் வீட்டை விட்டு கிளம்புகிறார் குணசேகரன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் ஈஸ்வரியை விவாகரத்து செய்ய முயற்சிகளை மேற்கொள்ள அப்பத்தா வந்து அதிர்ச்சி கொடுத்தார்.
அதுக்கு முன்னாடி தீர்க்க வேண்டிய கணக்கு நிறைய இருக்கு என குணசேகரனை அழைத்துச் சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது அப்பத்தா பேச வேண்டிய காலம் போய் கேட்க வேண்டிய காலம் வந்திருச்சு என்று குணசேகரனிடம் சொல்ல அதைக் கேட்ட குணசேகரன் வாப்பா கதிரே கிளம்பலாம் என்று சொல்ல ஞானம் இருங்க அண்ணே என்று தடுத்து நிறுத்த அதான் பேசுற காலம் போய் கேட்கிற காலம் வந்துருச்சுன்னு தெளிவா சொல்லிட்டாங்க இல்ல யாருக்கு என்ன காலம் வந்திருக்குன்னு பாத்துடலாம் என்று கூப்பிடுகிறார்.
அடுத்ததாக ஆடிட்டர் மற்றும் லாயரை சந்தித்து பேச அவர்கள் அவங்க அடுத்து எப்படி அடி எடுத்து வைக்கிறாங்கன்னு பார்த்து தான் முடிவு எடுக்கணும் என்று சொல்ல குணசேகரன் அப்போ அப்பத்தாவை போட்டுடலாமா என்று கேட்கிறார்.