எதற்கும் துணிந்தவன் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
Etharkum Thuninthavan Movie Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சூர்யாவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதைக்களம் :
நடிகர் சூர்யா வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக ஏற்படும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஒருவராக இருந்து வருகிறார். படத்தின் வில்லனான வினய் மற்றும் அவருடைய கும்பலால் சமுதாயத்தில் உள்ள பெண்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி சூர்யாவின் குடும்பத்திலும் ஒரு பெண் பாதிக்கப்பட இதனை எதிர்த்து வினையை பழிவாங்க முடிவு செய்கிறார் சூர்யா. அதன் பின்னர் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் :
பொள்ளாச்சி விவகாரம் உட்பட பெண்களுக்கு எதிராக நடந்த பல விஷயங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
ஆக்சன் எமோஷன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த பக்கா குடும்ப கதையாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். நடிகர் சூர்யா வழக்கம்போல் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பிரியங்கா மோகன் அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.
சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் என படத்தில் நடித்துள்ள அனைவரும் அவர்களில் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுத்து உள்ளனர்.
சூரி, புகழ் ஆகியோரின் காமெடி ரசிகர்களை ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும் பெரிய அளவில் ரசிக்க வைக்கவில்லை. டி இமானின் இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக உள்ளன.
வினய் மிரட்டல் வில்லனாக இந்த படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. எடிட்டிங் கனகச்சிதம்.
தம்ப்ஸ் அப் :
1. படத்தின் கதைக்களம்
2. சூர்யா, வினய் ஆகியோர் நடிப்பு
3. இசை
4. வசனங்கள்
தம்ப்ஸ் டவுன் :
1. முதல்பாதியில் வேகத்தை கொஞ்சம் கூட்டி இருக்கலாம்.
2. வழக்கமான சில லாட்ஜிகல் தவறுகள்