England vs New Zealand :
நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி ’எட்ஜ் ஆஃப் த் சீட்’ ஆக முடிந்தது. போட்டி டிரா ஆக, சூப்பர் ஓவர் வீச முடிவு செய்யப்பட அதிலும் டிரா ஆக பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்துக்கு கோப்பை அளிக்கப்பட்டது.
இந்த அனைத்துக்கும் காரணமாக’ பென்ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்ற ஓவர்த்ரோவிற்கு விதிகளின் படி அதற்கு 6 ரன்கள் கொடுத்திருக்கக் கூடாது 5 ரன்களே கொடுத்திருக்க வேண்டும்.
எனவும் ஸ்டோக்ஸை நான் ஸ்ட்ரைக்கர் இடத்தில்தான் நிறுத்தியிருக்க வேண்டும்’ எனவும் அவ்வாறு அளிக்கப்பட்டு இருந்தால் நியுசிலாந்து வெற்றி பெற்றிருக்கும் எனவும் குரல்கள் எழுந்தன.
ஆமை வேகத்தில் ஆடும் நியூசிலாந்து 40 ஓவருக்கு வெறும் 150 ரன்கள் மட்டுமே.!
இதுகுறித்து 6 ரன்கள் அளித்த கள நடுவர் தர்மசேனா விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘இறுதிஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் கப்தில் ஓவர் த்ரோவுக்கு இங்கிலாந்து அணிக்கு 6 ரன்கள் வழங்கிய எனது முடிவு தவறானதுதான் என்பதை நான் ரீப்ளேயில் பார்த்து தெரிந்துகொண்டேன்.
ஆனால், மைதானத்தில் இருக்கும்போது என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. ஆனால், அந்த தவறுக்காக நான் வருத்தப்படமாட்டேன். ஏனென்றால், நான் அந்த நேரத்தில் அளித்த முடிவுக்கு, ஐசிசி என்னை அழைத்துப் பாராட்டியது.
ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை ஓடி முடித்துவிட்டார் என்று நினைத்துதான் நானும் லெக் அம்பயரும் ஆலோசித்தும் 6 ரன்கள் வழங்கினோம்.’ எனக் கூறியுள்ளார்.