மத்திய அரசு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் ஆவேசம்
‘கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது’ என ரஜினிகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்..
காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சி அடையத் செய்துள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது இந்தியா. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கூலி படத்தின் ஷூட் முடிந்து, தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், பகல்காம் தாக்குதல் குறித்து தெரிவிக்கையில், ‘காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்க வேண்டும் என்று செய்கிறார்கள்.
அதைச் செய்தவர்களுக்கும், அவர்கள் பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும். இதே மாதிரி மீண்டும் செய்ய வேண்டும் என கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது.
மத்திய அரசு கூடிய விரைவில் அதை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.