Do you know who was the first to act in Nattamai movie
Do you know who was the first to act in Nattamai movie

நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவரது நடிப்பில் “நாட்டாமை” என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்தது.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜயகுமார் ,சரத்குமார், குஷ்பூ ,மீனா,கவுண்டமணி, செந்தில் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சரத்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப் படத்தில் முதலில் பார்த்திபன் தான் நடிக்க இருந்தாராம்.

கே.எஸ் ரவிக்குமார் பார்த்திபனிடம் கதை சொன்ன போது அவருக்கு கதை ஒத்து வராது என்று சொல்லிவிட்டாராம். அடுத்ததாக தான் இந்த வாய்ப்பு சரத்குமாருக்கு சென்றுள்ளது. இந்தப் படத்தில் பார்த்திபன் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று எங்களோடு கமெண்டில் ஷேர் பண்ணுங்க.