பிரியங்காவின் திருமணத்திற்கு மாகாபா வராததற்கு காரணம் என்ன தெரியுமா? முழு விவரம் இதோ.!!

பிரியங்காவின் திருமணத்தில் மாகாபா வராததற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

Do you know the reason why MaKaPa didn't come to Priyanka's wedding
Do you know the reason why MaKaPa didn’t come to Priyanka’s wedding

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. அவருக்கு இணையான தொகுப்பாளராக இருந்து வந்தவர் மாகாபா ஆனந்த்.

இவர்கள் இருவரும் சேர்ந்து சூப்பர் சிங்கர், ஓ சொல்றியா ஓ ஓ சொல்றியா போன்ற சில நிகழ்ச்சிகளை ஒன்றாக தொகுத்து வழங்கி வருகின்றனர்.இவர்கள் தொகுப்பாளர்களை தாண்டி ஒரு நல்ல நண்பர்களாக இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே

இந்நிலையில் பிரியங்கா சில நாட்களுக்கு முன் திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். எளிமையான முறையில் நடந்த அந்த திருமணத்தில் பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பிரியங்காவின் நெருங்கிய நண்பரான மாகாபா ஆனந்த் திருமணத்தில் பங்கேற்காதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அதற்கு பதில் கிடைத்துள்ளது அதாவது மாகாபா ஆனந்த் அவருடைய திருமண நாளை கொண்டாட வெளிநாட்டுக்குச் சென்று இருப்பதால் பிரியங்காவின் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Do you know the reason why MaKaPa didn't come to Priyanka's wedding
Do you know the reason why MaKaPa didn’t come to Priyanka’s wedding