முதல் முறையாக தனது மகளின் போட்டோவை வெளியிட்டுள்ளார் திவ்யா ஸ்ரீதர்.
கன்னட சின்னத்திரையில் அறிமுகமாகி சீரியல்களில் நடித்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் திவ்யா ஸ்ரீதர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் ஹீரோ அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
மேலும் திவ்யா அர்ணவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக தொடர்பு குற்றச்சாட்டுகளை கூறி அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார்.
மேலும் கர்ப்பமாக இருந்து வந்த திவ்யாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய மகளின் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
போட்டோவை பார்த்த ரசிகர்கள் பாப்பா கியூட்டாக இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.