காதல் கதை தயாராக இருக்கிறது.. ஆனால் பெரிய ஹீரோக்கள் தயாராக இல்லை.. கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்.
புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் கௌதம் மேனன்.

தமிழ் சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகம் திறமை கொண்டவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் ஒரு காதல் கதை தயாராக இருப்பதாகவும் ஆனால் பெரிய ஹீரோக்கள் யாரும் இப்போது காதல் கதையை செய்ய தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அதனால் தான் தற்போது நான் நடிகர் இளம் நடிகர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் நானும் எஸ் டி ஆர் முன்பு நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்தோம் ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது அதன் பிறகு தான் VTK செய்தோம் என்று கூறியுள்ளார். தற்போது இந்தக் காதல் கதை இரண்டு பேருக்கும் இடையிலான ஒரு தூய நாடகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
