மாமன்னன் திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர் அளித்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் படம் குறித்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் விளங்கும் அமீர் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், “மாரி செல்வராஜ் மத மோதல்களை உருவாக்குகிறார் என்பதை நான் ஏற்கவில்லை. ஒரு சமூகத்தினர் பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்த வலியை திரைப்படம் மூலமாக மாரி செல்வராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார். எனக்கு தெரிந்து இந்த கருத்துகள் மோதல்களை ஏற்படுத்தும் கருத்தாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களின் கருத்தாகதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.