டிமான்டி காலனி 3 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

டிமான்டி காலனி 3 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜய் ஞானமுத்து இயக்கப் போகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
