டிமான்டி காலனி 2 படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கலந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டிமாண்டி காலனி. அதை ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்த பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் சாம் சி எஸ் படத்திற்கு இசையமைக்கிறார்.

இத படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஓசூர், ஆந்திரா உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளது.

விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.