டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் பிரத்யேக வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான சூப்பரான ஹாரர் திரைப்படம் டிமாண்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாம்.சி.எஸ் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஓசூர், ஆந்திரா உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்திருந்தது.

இப்படத்தின் முதல் பாகத்தின் வரவேற்பால் இந்த இரண்டாம் பாகத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் நிலையில் இன்று இப்படத்தின் பிரத்தியேக வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மிரட்டலான வீடியோ தற்போது இணையதளத்தில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வைரலாகி வருகிறது.