samantha
நடிகை சமந்தா மற்றும் அவரின் மாமனார் நாகார்ஜுனா ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dead body found in nagarjuna place – ஹைதராபாத்துக்கு அருகேயுள்ள பாப்பிரெட்டிகுடா எனும் கிராமத்தில் நடிகை சமந்தா, அவரின் கணவர் நாக சைதன்யா, அவரின் மாமனார் நாகார்ஜுன்னா, அவரின் மனைவி நடிகை அமலா ஆகியோருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு இயற்கை விவசாயம் செய்ய நாகார்ஜுனா திட்டமிட்டிருந்தார்.

லண்டனில் தனுஷுக்கு இவ்வளவு ரசிகர்களா? – வைரல் வீடியோ

இது தொடர்பாக சில பணியாளர்களை அங்கு அனுப்பியுள்ளார். அப்போது, உபயோகிக்கப்படாத வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளார்.

எனவே, விவசாயிகள் அங்கே சென்று பார்த்த போது அங்கு அழுகிய நிலையில் ஒரு உடல் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அது ஒரு ஆணின் சடலம் என்பது, அவர் இறந்து 6 மாதங்கள் ஆகியிருக்கலாம் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.