லியோ அதிகாலை காட்சிகளுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 மணி காட்சிகள் மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை நாட முடிவெடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் லியோ அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏழு மணிக்கு காட்சிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து அரசே முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

கேரளா கர்நாடகா மாநிலங்களில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.