குக் வித் கோமாளி எலிமினேஷனுக்கு பிறகு ஆண்ட்ரியன் தனது முதல் பதிவை பதிவு செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் ஆண்ட்ரியன்.
வெளிநாட்டைச் சேர்ந்த பிரபலமான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் இன்னும் பாப்புலர் ஆனார். இந்த நிலையில் கடந்த வார எலிமினேஷனில் ஆண்ட்ரியன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது எலிமினேஷன் குறித்து முதல் பதிவை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் என்னுடைய எலிமினேஷனுக்கு யாரும் காரணம் இல்லை இந்த நாள் என்னுடையது அல்ல, அதனால் வெளியேறி விட்டேன். மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியில் கம் பேக் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.