CM About Lockdown Extension
CM About Lockdown Extension

மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காரணம் என்ன? என கூறியுள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.

CM About Lockdown Extension : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னையில் மட்டுமே இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அஜித் படத்துக்கு நோ சொன்ன ஷாருக்கான் – இதுவரை வெளிவராத தகவல்!

நேற்று திடீரென மற்ற மாவட்டங்களிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து இருந்தது.

இதற்கான காரணம் என்ன என்பது பற்றி முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்றதே வைரஸ் தொற்று அதிகமாக காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தகவல் பரவியதை அடுத்து இதுவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.