ராஜா ராணி 2 சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று ராஜா ராணி 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஒளிபரப்பாக தொடங்கிய இந்த இரண்டாவது சீசன் ஆலியா மானசா நடிக்கும் போது ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு அவர் இந்த சீரியலை விட்டு வெளியேற ரியா விஸ்வநாதன் கமிட்டானார். பிறகு அவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் திடீரென சீரியலை விட்டு வெளியேறினார். இந்த நிலையும் தற்போது சந்தியா கதாபாத்திரத்தில் ஆஷா கவுடா நடித்து வருகிறார்.
சீரியலின் கதை ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை சந்தித்து வருகிறது. இதனால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளது விஜய் டிவி. விக்கி கொலை வழக்கை சந்தியா விசாரித்து வரும் நிலையில் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்த உடன் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
மேலும் கிளைமேக்ஸ் காட்சியில் விக்கியை கொலை செய்த குற்றத்திற்காக சிவகாமி ஜெயிலுக்குப் போவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் எது எப்படியோ சீரியலை முடிச்சா போதும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.