வணங்கான் திரைப்படம் ட்ராக் ஆனதுக்கு என்ன காரணம் என்ற உண்மையை உடைத்துள்ளார் பத்திரிக்கையாளர் ஒருவர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. பல தடைகள் சோதனைகள் தோல்விகளை தாண்டி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
இவருடைய வெற்றிப் பயணத்திற்கு மிக முக்கிய காரணங்களாக இருந்த இயக்குனர்களில் ஒருவர்தான் பாலா. பாலா இயக்கத்தில் வெளியான நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் சூர்யாவிற்கு ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.
இப்படியான நிலையில் தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் வணங்கான் திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் சில காரணங்களால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் பாலா சூர்யாவை இன்னும் பழைய சூர்யாவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். வணங்கான் படப்பிடிப்பு தொடங்கியதும் ஒன்பது நாட்கள் சூர்யாவை ஓட விட்டே படத்தை எடுத்துள்ளார்.
ஆனால் சூர்யாவால் இந்த பழைய பாலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் என்ன சார் ஓட விட்டுட்டே இருக்கீங்க என கேள்வி எழுப்ப பாலா சொல்றத மட்டும் செய்யுங்கள் சூர்யா என கூறியதாக சொல்லப்படுகிறது. இங்கிருந்து தான் பிரச்சனை தொடங்கியது, அதன் பிறகு தான் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என தெரிவித்துள்ளார்.