கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 22 சதவீத நெல் கொள்முதல் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
Central Goverment About Purchase of Paddy : தமிழகம், கேரளா, ஹரியானா, பஞ்சாப், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் பயிர் விவசாயம் பரவலாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாநில விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு நெல் கொள்முதலை விறுவிறுப்பாக செய்து வருகிறது. இதுவரை 8 லட்சத்து 54,000 விவசாயிகளிடம் இருந்து 98.19 லட்சம் டன் நெல்லை ரூபாய் 18,539.86 கோடிக்கு வாங்கியுள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் நெல் கொள்முதல் 22.43% அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 80.20 லட்சம் டன் நெல்லை தான் கொள்முதல் செய்து இருந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட 22.43 சதவீதம் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக வரலாறு காணாத அளவில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.