கடைசி வரை நிறைவேறாமல் போய் உள்ளது நடிகர் விஜயகாந்தின் ஆசை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து அதன் பிறகு தேமுதிக என்ற கட்சியை தொடங்கி மிகப்பெரிய மூன்றாவது கட்சியாக கொண்டு வந்து நிறுத்தி சாதனை படைத்தார் விஜயகாந்த்.
கடந்த சில வருடங்களாகவே உடல் நலக் குறைபாடு காரணமாக முடங்கி இருந்த இவர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயம்பேட்டில் உள்ள உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மாலை கட்சி அலுவலகத்தில் பின்புறமே அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்காந்தின் ஆசை நிறைவேறாமல் போன விஷயம் குறித்து தெரிய வந்துள்ளது. காட்டுப்பாக்கத்தில் விஜயகாந்த் 10 வருடங்களாக வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
உடல் நலக் குறைபாடு காரணமாக வீடு கட்டும் வேலைகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. ஆனாலும் கடைசி வரை விஜயகாந்த் அந்த வீட்டிற்குள் நுழையாமலேயே மறைந்து விட்டார் என பலரும் கண்ணீருடன் கூறி வருகின்றனர்.