தனது உடல்நிலை சீராக இருப்பதாக கூறி வதந்திகளுக்கு விஜயகாந்த் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். அதன் பிறகு தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வந்த அவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். ஆனால் தற்போது அவரது உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அவரது மகன் விஜய் பிரபாகரன் கூறியதாக வெளியான தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “என்னுடைய உடல்நிலை குறித்து வெளியான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். தேமுதிக அலுவலகத்தில் எனது பிறந்த நாளை முன்னிட்டு நாளை தொண்டர்களை, மக்களையும் நேரில் சந்திக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்”. இந்த தகவல் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்து வைரலாகி வருகிறது.