ஆலியா பட் நடிக்கும் ‘பிரம்மாஸ்திர’ படத்தின் இரண்டாம் பாகத்தில் லீட் ரோலிங் தீபிகா படுகோனே நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான அலியா பட் ‘ஏ தில் கே முஸ்கில்’ படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் ‘பிரமாஸ்திரா’. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. மூன்று பாகங்களில் உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் சிவன் மற்றும் பார்வதியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாம். அதில் பார்வதி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளாராம்.

பிரமாஸ்திரா முதல் பாகத்தின் இறுதியில், நடிகை தீபிகா படுகோனே கேமியோ ரோலில் வருவார். பிறகு இரண்டாவது பாகத்தில் லீட் ரோல் கொடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து ரசிகர்கள் பலர் இரண்டாவது பாகத்தில் தீபிகா படுகோனே நடித்தால் அப்போ ஆலியா பட்டின் காட்சிகள் கண்டிப்பாக குறைந்து விடும் என்பதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.