BJP Tamilisai Soundararajan Speech – மத்திய பிரதேச மாநில தேர்தலில், மொத்தம் உள்ள 230 தொகுதிகளில், 116 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகின்றது.
மேலும், பாஜக மிகப்பெரிய பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளது.இது மத்திய மோடி அரசின் மீதான மக்களின் அதிருப்தியாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், “எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது வெற்றியால் பாஜக துள்ளிக்குதிப்பதும் இல்லை, தோல்வியால் துவள்வதும் இல்லை என்று தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்” .
மேலும் 5 மாநில பேரவை தேர்தல் தோல்வி, வெற்றிகரமான தோல்வி என்று தமிழிசை தற்போது பேட்டியளித்துள்ளார்.
காலை 9 மணி நிலவரப்படி ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்த போது, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேரம் செல்ல செல்ல, வாக்கு வித்தியாசத்தில் மாற்றம் ஏற்பட்டது. மேலும் சட்டீஸ்கரில் எளிதாக காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.
இந்த முன்னிலை பாஜக முன்னிலை வகித்த தொகுதிகளை விட மிக அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் மட்டும் காலை 10 மணி வரை கடும் போட்டி நிலவியது.
முதலில் பாஜக இங்கு முன்னிலை வகித்த போதிலும், காலை 10 மணிக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பாஜகவை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்க ஆரம்பித்தது.
மேலும் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.இந்நிலையில் பாஜக தோல்வி வெற்றிகரமான தோல்வி என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.