2023ம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையை கொண்டு வர மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.
BJP Govt planning railway to privatisation by 2023 – பாஜக ஆட்சியில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விமான நிலையங்கள், ரயில் பெட்டி தொழிற்சாலைகள், ரயில்வே துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க பாஜக தலைமையிலான அரசு திட்டம் தீட்டி வருகிறது.
இதில் முதலாவதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே துறையை 2023ம் ஆண்டிற்குள் தனியார் மயமாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.
முதலாவதாக தமிழகத்தில் சென்னை – பெங்களூரு, சென்னை – கோவை, சென்னை – மதுரை போன்ற வழிதடங்களில் தனியார் ரயில் சேவையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதோடு, சென்னை புறநகர் மின்சார ரயில் பாதைகளிலும் தனியார் சேவையைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தண்டவாளத்தில் மூதாட்டி.. அருகில் ரயில்… என்ன ஆச்சு நீங்களே பாருங்க (வீடியோ)
இது ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.