இந்த வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்று நூறாவது நாளை எட்டியுள்ளது.
கடந்த வாரம் ஏடிகே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போதைய பிக் பாஸ் வீட்டுக்குள் அசீம், விக்ரமன், மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன், கதிரவணன் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்களில் அசிம், விக்ரமன் தான் முதல் இரண்டு இடங்களை பிடிப்பார் என்பது உறுதியாகிவிட்டது.
மீதமுள்ளவர்களில் சிவின் மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதிரவன் இந்த வாரம் அறிமுகமாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உண்மையில் என்ன நடக்கிறது யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது இன்னும் ஐந்து நாட்களில் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.