தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விக்ரமன் விளக்கம் அளித்துள்ளார்.
youtube சேனல்களின் தொகுப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன்.
பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது எப்போதும் அறம் வெல்லும் என சொல்லி மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று வந்த இவர் மீது கிருபா முனுசாமி என்ற வழக்கறிஞர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக வரவேற்பு குற்றச்சாட்டை வைத்து அதற்கான ஆதாரங்கள் சிலவற்றையும் வெளியிட்டு இருந்தார்.
அது மட்டுமல்லாமல் தன்னை மட்டும் இல்லாமல் மேலும் கிட்டத்தட்ட 15 பெண்களை விக்ரமன் காதல் என்ற பெயரில் ஏமாற்றி இருப்பதாகவும் தெரிவித்தார். அவருடைய குற்றச்சாட்டுக்கு தற்போது விக்ரமன் தனது ட்விட்டர் பதிவின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது எப்போதும் நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருக்கும் என்று கூறி இருக்கும் அவர் இது குறித்து நீளமான விளக்கத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் கிருபா முனுசாமி தனக்கு எழுதிய காதல் கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவின் இறுதியில் அறம் வெல்லும் என சொல்லி நிறைவு செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு