இந்த வார பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்களில் மணிகண்டன் மற்றும் ஏடிகே உள்ளிட்டோர் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
மேலும் ஏடிகே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆமாம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல ஆதரவை பெற்றிருந்த இலங்கை தமிழச்சியான ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன. உண்மையில் வெளியேற்றப்பட்டது யார்? ஜனனியா அல்லது ஏடிகே-வா? என்பது இன்றைய நிகழ்ச்சியில் உறுதியாக தெரிந்து விடும்.