Bhuvneshwar Kumar :
காயம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விளையாடாத இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாகவும், இதனையடுத்து அவர் இன்று பயிற்சிக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த ஜூன் 16ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றபோது, அந்த போட்டியில் அசத்தலாக பந்துவீசிய புவனேஷ்குமார் தனது மூன்றாவது ஓவரை வீசியபோது திடீரென காயம் அடைந்தார்.
ராதிகாவின் வீட்டில் நடந்த விஷேகம், குவிந்த வாழ்த்துக்கள் – வெளியான புகைப்படங்கள்!
அதனையடுத்து அவருக்கு பதிலாக அந்த ஓவரை விஜய்சங்கர் முடித்து வைத்தார். விஜய் சங்கர் அந்த ஓவர் முடித்து வைத்தது மட்டும் இல்லமால் இந்திய அணிக்காக தனது முதல் விக்கெட் எடுத்து கொடுத்து அசத்தினார்.
இந்த நிலையில் புவனேஷ்வர் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரது காயம் விரைவில் குணமடையும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து புவனேஷ்வர்குமார் அணிக்கு மீண்டும் விரைவில் திரும்புவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அவர் தற்போது பூரண குணம் அடைந்துவிட்டதாகவும் இதனையடுத்து அவர் இன்று வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படகாட்சியும் வெளியாகியுள்ளது. எனவே நாளை மறுநாள் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதும் போட்டியில் புவனேஷ்குமார் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவனேஷ்குமார் அணிக்கு திரும்பினால் விஜய்சங்கர் அணியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் சுற்றுவட்டாரம் தெரிவிக்கிறது. என்ன நடக்கும் என்று நடக்க இருக்கும் மே. தீ., அணியுடன் போட்டி போடும் போது தெரிய வரும்.