துளசி மற்றும் கண்ணம்மாவின் சந்திப்பின் போது இருவரும் பேசிக் கொண்டதை ஓட்டு கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் வெண்பா.
Bharathi Kannamma Serial Episode Update 13.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஹேமா தன்னுடைய மகள் என கண்ணம்மாவுக்கு சந்தேகம் வர அவர் தன்னுடைய மாமியார் சௌந்தர்யாவிடம் இதைப்பற்றி கேட்டதைத் தொடர்ந்து துளசி சந்தித்து கேட்டார். துளசி எனக்கு தெரியாது என்று கூறி சமாளித்து விட்டார். இதனையடுத்து சௌந்தர்யா தனது கணவரும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பொய் எந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டு இருக்கு என பேசிக் கொண்டே இருக்கின்றனர். இந்த சமயத்தில் பாரதி வந்துவிடுகிறார். என்ன பொய் சொன்னீங்க என கேட்க இருவரும் இதே தான் கூறி சமாளித்து விடுகின்றனர்.
இன்றைய ராசி பலன்.! (13.9.2021 : திங்கள் கிழமை)
அதன் பின்னர் ஹேமாவிற்கு மட்டுமல்லாமல் லட்சுமிக்கும் சேர்த்து துணி எடுத்து வந்துள்ளார். இருவரும் ஹேமாவை கூப்பிட்டு இனி எது வாங்கினாலும் லட்சுமிக்கு சேர்த்து தான் வாங்க வேண்டும். அடம்பிடித்து வாங்க வேண்டும் என சொல்லித் தருகின்றனர்.
வெண்பா இதுவரைக்கும் நான்தான் எல்லாரையும் சுத்தவிட்டுட்டு இருந்தேன் இப்போ எனக்கே தெரியாம நிறைய விஷயம் நடக்குது என புலம்பிக் கொண்டிருக்கிறார். துளசியின் சௌந்தர்யாவும் என் சந்திக்கவேண்டும் இருவருக்கும் என்ன ரகசியம் இருக்கு என யோசித்து பின்னர் துளசியை சந்திக்க செல்கிறார். அங்கே கண்ணம்மாவும் துளசியும் பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்ட வெண்பா லஷ்மி ஹேமா என இருவரும் அன்னம்மாவின் மகள்கள் என தெரியவருகிறது. இதனால் வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.
Keerthy Pandiyan Fun Shopping With Family | Madras Farmers Market
சௌந்தர்யா ஹேமாவை சிடி வாங்கி வந்ததை நினைத்து கண்ணம்மாவுக்கு துரோகம் செய்து விட்டதாக கண்ணீர் விட்டு அழுதார். சௌந்தர்யாவின் கணவர் சௌந்தர்யாவுக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்துகிறார். ஒருவேளை கண்ணம்மாவுக்கு ஹேமா தன்னுடைய மகள் என தெரிந்து விட்டால் அம்மாவை கூட்டிட்டு போய்டுவாளா? பாரதி விடுவானா என பேசிக் கொள்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட்.