போதையில் வாந்தி எடுத்து மட்டையான பாரதியை காலையில் எழுந்ததும் வச்சு செய்துள்ளார் கண்ணம்மா.

Bharathi Kannamma Episode Update 13.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பாரதி வாந்தி எடுத்ததும் கண்ணம்மா அவரை கிளீன் செய்து பெட்ரூமில் படுக்க வைத்தார். இதனையடுத்து சௌந்தர்யா போன் செய்து என்ன ஏது என விசாரிக்க நான் பாத்துக்கறேன் என கூறினார். பிறகு வீட்டில் சௌந்தர்யா டென்ஷனாக அமர்ந்திருக்க அகிலன் மற்றும் சௌந்தர்யாவின் கணவர் வந்து அமர்கின்றனர். ஏன் இப்படி கோபமாக இருக்க எனக் கேட்க பாரதி இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான். பாவம் கண்ணம்மா தனியா அவ என்ன செய்வா என புலம்பிக் கொண்டே இருக்கிறார். பாரதி மட்டும் இப்ப எதிர்க்க இருந்தால் கண்ணத்திலேயே அரை விட்டிருப்பேன் எனக் கூறுகிறார்.

பாரதி கண்ணம்மா ரெண்டு பேரும் என்ன வேணா பண்ணட்டும், அந்த விஷயத்தில் நாம் தலையிடக் கூடாது. அவங்களுக்குள்ளே பழைய நினைவுகள் வரும் சண்டை வரும் அப்பதான் சமாதானமும் செய்து கொள்வார்கள் என கூறுகிறார். மேலும் கண்ணம்மாவை சுற்றி இருப்பவர்களிடம் பாரதிதான் அவளுடைய புருஷன் என்பதை மட்டும் நீ தெரியப் படுத்து என ஐடியா கொடுக்கிறார் வேணு. அகிலனும் அப்பா சொல்வது தான் சரி என சொல்ல சௌந்தர்யாவும் சரி பார்க்கலாம் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் தூங்கி எழுந்த பாரதி நைட்டு சண்டை போட்டனா என்னன்னு தெரியலையே, சரி போய் பார்க்கலாம் என எழுந்து வெளியே வருகிறார். கண்ணம்மா முகத்தில் துணியை கட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டிருக்கிறார். என்ன இவளுக்கு கொரானாவா மாஸ்க் வேண்டுமே என பாரதி கூறுகிறார். பிறகு அவர் கண்ணம்மாவுக்கு எதிரில் வந்து அமர்கிறார். என்ன ஒரே நாத்தம் அடிக்குது என்ன பார்க்க கண்ணம்மா என்ன நாறுதுனு தேடுறீங்களா, அங்க பாருங்க என வாந்தி எடுத்ததை காட்டுகிறார். பிறகு பாரதி அதை எதுக்கு இன்னும் கிளீன் பண்ணாம இருக்க. க்ளீன் பண்ண வேண்டியதுதானே என கூறுகிறார்.

எப்படி நீங்க கண்ட இடத்துக்குப் போய் கண்டதை குடிச்சுட்டு வந்து நடுவீட்டில் வாந்தி எடுப்பீங்க. அதை நான் கிளீன் பண்ணனுமா எனக் கூறுகிறார். நீங்கதானே சொன்னீங்க நான் வெறும் சமையல்காரி தானு. அப்போ அத நான் எதுக்கு கிளீன் பண்ணனும்? குடித்துவிட்டு வாந்தி எடுக்க தெரிஞ்சதுல, போய் கிளீன் பண்ணுங்க என கூறுகிறார். என்னது நான் கிளீன் பண்ணனுமா என பாரதி அதிர்ச்சி அடைகிறார்.

இதே தெருவுல காசு கொடுத்தா கிளீன் பண்றதுக்கு ஆயிரம் பேர் இருப்பாங்க என பாரதி கூறுகிறார். அப்படியா போய் கூட்டிட்டு வாங்க. உடம்பு முடியலனா ஓடிவந்து பார்ப்பாங்க, இப்படி அசிங்கம் பண்ணா யாரும் வரமாட்டாங்க என கூறுகிறார். சரி உங்களுக்கு ஒரு ஆப்ஷன் தரேன், என்ன நீங்க உங்களுடைய வீட்டுக்காரியா தான் பார்க்கிறேன் என்று சொல்லுங்க நான் ஏன் செய்கிறேன் என கூறுகிறார். ஓவரா பேசுறாலே என பாரதி அதனை அவரே கிளீன் செய்யத் தொடங்குகிறார். கண்ணம்மா இங்க இருக்கு பாருங்க அங்க இருக்கு பாருங்க அதை துடைங்க என பாரதியை வச்சி செய்கிறார்.

பிறகு இதையெல்லாம் அத்தைக்கு அனுப்பனுமே என பாரதிக்கு தெரியாமல் அதனை வீடியோ எடுத்து அனுப்புகிறார். பிறகு இனிமேலாவது குடிக்காமல் இருங்க என சொல்ல. இனி குடிச்சிட்டு வந்தா ரோட்ல வந்தாலும் படுத்து தூங்குவேனே தவிர உன் வீட்டுக்கு வர மாட்டேன் என பாரதி கூறுகிறார். அப்போ கூட குடிக்க மாட்டேன்னு சொல்லல என கண்ணம்மா கூறுகிறார். நடுவுல கொஞ்ச நாளா நீங்க குடிக்கலன்னு அத்தை சொன்னாங்க. நாங்க யார் சொல்லியும் கேட்காதவன் ஹேமா சொல்லி கேட்டான் என சொன்னாங்க.

இப்ப என்ன உங்க பொண்ணு மேல பாசம் குறைஞ்சிடுச்சா? குடிக்கணும்னு காரணம் தேடினா தினமும் ரெண்டு காரணம் கிடைக்கும். குடிக்கக் கூடாதுன்னு முடிவு செய்ய ஒரு காரணம் போதும் என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.