வெண்பாவால் கண்ணம்மாவை அழைத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாரதி.
Bharathi Kannamma Episode Update 28.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் வெண்பா பேசியதை நினைத்து பாரதி கண்ணம்மாவை ரூமுக்கு அழைக்கிறார். ரூமுக்கு வந்த கண்ணம்மா சொல்லுங்க டாக்டர் என்ன விஷயம் என கேட்க உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என கூறுகிறார். அபிஷலாக இருந்தா இங்க பேசலாம் பர்சனலாக இருந்தால் இங்கே பேச வேண்டாம் என கூறுகிறார்.
அதெல்லாம் எனக்கு தெரியாது உன் கிட்ட பேசணும், அதுக்காக உண்மை பீச், ரெஸ்டாரன்ட் கூட்டிட்டு போயிட்டு பேசிட்டு இருக்க முடியாது என கூறுகிறார். சரி சொல்லுங்க என்ன விஷயம் என கண்ணம்மா கேட்க அன்னைக்கு உன்னை பாராட்டியது நீ வேலையை சரியா செய்த காரணத்திற்காக தான். அதுக்கும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என கூற கண்ணம்மா அது எனக்கு நன்றாகவே தெரியும் என கூறுகிறார்.
கோர்ட்டில் கூடிய விரைவில் நம்முடைய டிவோர்ஸ் கேஸ் வரப்போகிறது. நாம இருவரும் பிரிந்து விடுவதுதான் நல்லது என கூறுகிறார். உனக்கு என்ன வேணுமோ கேளு எவ்வளவு பணம் வேணும்னாலும் கேளு நான் கொடுக்கிறேன் திரும்பவும் நாம பார்த்துக் கொள்ளவே கூடாது என கூறுகிறார். எனக்கு பணம் காசு எதுவும் வேண்டாம் நான் எது கேட்டாலும் குடுப்பீங்களா என கேட்க சொல்லி எதுவாக இருந்தாலும் நான் செய்வேன் என பாரதி கூறுகிறார். என்னுடைய பொண்ணுக்கு அப்பா வேண்டும், இந்த சமுதாயத்தில் அவளுக்கென ஒரு அந்தஸ்து வேண்டும் என கூறுகிறார். அதை உங்களால் கொடுக்க முடியுமா என கூறிவிட்டு கண்ணம்மா வெளியே சென்றுவிடுகிறார்.
பிறகு பாரதிக்கு விவாகரத்து வழக்கறிஞர் போன் செய்து அடுத்த வாரம் கேஸ் விசாரணைக்கு வருகிறது நீங்க உங்களுடைய முடிவில் உறுதியாக இருங்க, விவாகரத்து கிடைத்து விடும் எனக் கூறுகிறார். பாரதி சரி என கூறி போனை வைத்துவிட்டு கண்ணம்மா உனக்கு விவாகரத்து தான் கிடைக்கும் அதுக்கு மேல என்னிடமிருந்து எதுவும் கிடைக்காது என சொல்லிக் கொள்கிறார்.
இந்த பக்கம் கண்ணம்மா வீட்டில் இருக்க அப்போது அஞ்சலி வீட்டுக்கு வருகிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் லட்சுமி வந்து அஞ்சலியை கட்டிப்பிடித்து சித்தி என பாச மழை பொழிகிறார். நீ இப்படி உரிமையாய் என்ன கட்டிப்புடிச்சு பேசுவேன்னு நான் எவ்வளவு நாளா காத்துகிட்டு இருந்தேன் என்று அஞ்சலி கூறுகிறார். பிறகு கண்ணம்மா லட்சுமியை ரூமுக்கு போய் படிக்கச் சொல்கிறார்.
இந்த நேரத்தில் கோர்ட்டிலிருந்து கண்ணம்மாவுக்கு விவாகரத்து வழக்கில் ஆஜராக நோட்டிஸ் வருகிறது. இதைப் படித்துப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார் பிறகு அஞ்சலி என்னாச்சு என கேட்க விவாகரத்து நோட்டீஸ் வந்தது பற்றி கூறுகிறார். என்ன பண்றதுன்னு தெரியல என கண்கலங்கி வருத்தப்பட அப்போது லட்சுமி உள்ளே இருந்து வெளியே வந்து இனி அப்பாவோட சேரவே முடியாதா அவர் நம்மள விட்டு போக போறாரா என அழுகிறார்.
நீங்க அப்பா கூட ஒரே வீட்ல தானே இருக்கீங்க நீங்க அவரிடம் பேசி அவர் மனதை மாற்ற முயற்சி செய்ய கூடாதா.? தாத்தா பாட்டி அப்பா கிட்ட பேச கூடாது? நான் வேணும்னா அப்பாகிட்ட இதைப்பற்றி பேச வா என கேட்க கண்ணம்மா அவர்தான் உன்னுடைய அப்பானு தெரிஞ்சு எப்படி அமைதியாக இருந்தியோ அதே மாதிரி அமைதியாக இரு, இது பெரியவங்க விஷயம் என கூறுகிறார். பிறகு லட்சுமி கண்ணம்மாவை பிடித்துக்கொண்டு அழுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.