பாரதியை வெண்பா ஏற்றிவிட கடைசியில் கண்ணம்மா வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 22.03.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. உனக்கு கார் வேணுமா வேணுமா என்ன வேணும்னாலும் பண்ணி தரேன் ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி உன்ன காதலித்ததற்காக என்ன வேணாலும் செய்வேன் ஆனால் சேர்ந்து வாழ்வது மட்டும் ஒரு காலத்துக்கும் நடக்காது என கூறுகிறார். இதைக் கேட்ட கண்ணம்மா போதும் இது வேணும்னு கேட்கவே இல்லை அது முடியாதுன்னு சொல்லும்போது உங்க காரில் வீடு பணம் இதையெல்லாம் வெச்சுக்கிட்டு நான் என்ன பண்ண போறேன் என கூறுகிறார். ஒருநாள் உங்களுக்கு உண்மை எல்லாம் தெரிய வரும்போது நீங்க குற்ற உணர்ச்சியே செத்துடுவாங்க என கண்ணம்மா கூற பாரதி ஐ டோன்ட் கேர் என சொல்கிறார். இதனையடுத்து அவர் இங்கிருந்து கிளம்பி விட கண்ணம்மா கதறி அழுகிறார். சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.

அதன் பிறகு இந்தப் பக்கம் லட்சுமி ஒரு கோவிலில் வந்து அழுது கொண்டே சாமியிடம் வேண்டுகிறார். எங்க அப்பா யாருன்னு எனக்கு தெரியும் நான் உங்கிட்ட தான் வேண்டிக்கிட்டேன் எங்க அப்பா யாருன்னு எனக்கு காட்டிட்ட ஆனால் அவர் எங்களை ஏத்துக்க மாட்டாரு. நாங்க வீட்டுக்குள்ள வந்தா அவரு வெளியே போய்டுவேனு சொல்கிறார். நானும் எங்கம்மாவும் என்ன தப்பு பண்ணும் ஏன் எங்க அப்பாவுக்கு எங்களை புடிக்கல. பாரதி அங்கிள் தான் என்னுடைய அப்பானு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது‌. ஆனால் அவர் எங்களை புடிக்கலைன்னு சொல்றாரு. கடவுள் தானே அவர் மனசை மாத்தி இருக்கலாம் இல்ல என லட்சுமி அழுது வேண்டி கொண்டு இருக்கிறார்.

அப்போது தமிழில் சரஸ்வதி சரஸ்வதி வந்து என்னாச்சு பாப்பா தனியாக கோவிலுக்கு வந்து இருக்க ஏன் இப்படி அழுதுட்டு இருக்க என கேட்க லட்சுமி எங்க அப்பா யாருன்னு தெரியாது. சின்ன வயசிலிருந்தே நான் அவரை பார்த்ததே கிடையாது இப்போ எங்க அப்பா யார்னு கண்டு பிடிச்சுட்டேன் ஆனா அவரு எங்களை புடிக்கலைன்னு சொல்றாரு என அழுவ, சாமி கிட்ட சொல்லிட்ட இல்ல அவரு பார்த்து பாரு கண்டிப்பா உங்க அம்மாவும் அப்பாவும் சரி வாங்க ரெண்டு பேரும் நல்லவங்க தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து இருக்காங்க நிச்சயம் ஒன்னா சேருவாங்க, நீ கவலைப்படாத சந்தோஷமா இரு என சொல்கிறார்.

கண்ணம்மா நடந்து வந்து கொண்டே இருக்க அவருக்கு ஆட்டோ டிரைவர் குமார் அண்ணா போன் செய்து லட்சுமி ஸ்கூல் இல்லை என சொல்ல பதறி போகிறார் கண்ணம்மா. பிறகு ஸ்கூலுக்கு ஓடி வந்து விசாரிக்க லட்சுமி ஸ்கூலுக்கு வரவில்லை என சொல்கிறார். ஒருவேளை ஹாஸ்பிடலுக்கு போயிருப்பாளோ என பாரதியின் ஆஸ்பிட்டலுக்கு செல்கிறார் கண்ணம்மா.

அங்கே வெண்பா நீ அந்த கண்ணம்மா கூட வாழ புடிக்கல பேச புடிக்கலைன்னு சொல்ற ஆனா அவ கிட்ட சாப்ட்டா பேசிட்டு இருந்தா எப்படி உன்னை மதிப்பா? ஒருநாள் கண்டிப்பாக குழந்தைக்கு உன்னை அப்பாவா ஏத்துக்க வைப்பார் என கூறி பாரதியை ஏற்றி விடுகிறார். ஆனா நீ என்ன எப்படி இருக்குன்னு தெரியல ஒரு கருவேப்பிலை கொத்து மாதிரி யூஸ் பண்ணிக்கிட்டு இருக்க என்ன சொல்கிறார். நீ என்ன பத்தி என்ன நெனச்சிட்டு இருக்க எனக் கேட்க கண்ணம்மா அதை நான் சொல்லவா என குரல் கெடுக்க அதிர்ச்சி அடைகிறார் வெண்பா. இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.