பாரதிக்கு கண்ணம்மா கொடுக்கப்போகும் அதிர்ச்சி பற்றி தெரிந்த சௌந்தர்யா மிரண்டு போயுள்ளார்.
Bharathi Kannamma Episode Update 21.02.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா பாரதி வருவாரா வரமாட்டாரா என தன்னுடைய அப்பாவிடம் சொல்லி வருத்தப்பட்ட பிறகு லட்சுமி ஓடி வந்து வீட்டில் அப்பா பற்றி பேசுகிறார். எனக்கு உன்ன பார்த்தா பாவமாயிருக்கு பயமாகவும் இருக்கு என சொல்ல கண்ணம்மா ஏன் என கேட்கிறார். அப்பா வருவார் என்று தெரியல உன் கண்ண பார்த்தா அழுத மாதிரி இருக்கு அப்பா ஏதாவது சொன்னாரா அதை என்கிட்டே மறைக்கிறயா? என கேட்கிறார். உடனே வாய்தா வடிவுக்கரசி அப்பா வருவார். அப்போ இது எல்லாத்தையும் கேட்டுக்கோ என சொல்லி விளையாட அனுப்பி வைக்கிறார்.
பிறகு லட்சுமி வெளியே விளையாடிக் கொண்டிருக்கும்போது அப்போது சௌந்தர்யா குடும்பத்தோடு வந்து இறங்குகிறார். வெல்கம் அப்பா என லட்சுமி எழுதி இருப்பதை பார்த்து அனைவரும் ஆதங்கப்படுகின்றனர். அதன்பிறகு லட்சுமி ஓடி வந்து தாத்தா பாட்டி எல்லாம் வந்திருக்காங்க என சொல்கிறார். அவர்கள் எல்லாரும் உனக்கு பிடிக்கும் தானே அப்புறம் எதுக்கு முகத்தை இப்படி வச்சுருக்க சிரித்து சந்தோஷமாக பேசி என சொல்ல முயற்சி செய்கிறேன் எனக் கூறுகிறார் லட்சுமி.
பிறகு லட்சுமி விளையாடச் சென்று விட சௌந்தர்யா மற்றும் அஞ்சலி எல்லோரும் உள்ளே வருகின்றனர். லட்சுமி அப்பா வருவாரா என படிக்கட்டை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து கண்ணம்மா பரி தவிக்கிறார். இதனைப் பார்த்த சௌந்தர்யா லட்சுமியை கூப்பிட்டு வந்து எல்லோரும் வந்திருக்கும் வந்து எங்க கிட்ட பேசாம நீ என்ன பண்ற என கேட்கிறார். அம்மா பிறந்த நாள் அதுவுமா அழுது கிட்டு இருக்காங்க. பிறந்தநாள் அதுவுமாய் யாராவது அழுவாங்களா உங்கள மாதிரி எங்க அம்மாவை அழகாக மாத்துங்க பாட்டி என சொல்கிறார்.
பிறகு சவுந்தர்யா கண்ணம்மாவை உள்ளே அழைத்துச் சென்று எதுக்கு இப்படி இருக்க என கேட்க உங்களுக்கு தெரியாததா அவர் வருவாரா வரமாட்டாரா தெரியல என கண் கலங்குகிறார். அவனை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போனியா என்ன சொன்னார் எனக்கேட்க இதுவரைக்கும் உங்களுக்கு தெரியாத ஒரு ரகசியத்தை சொல்ல போறேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அவர் வருவார் என்று என் உள் மனதில் ஏதோ சொல்லுது என சொல்கிறார். அவர் கிட்ட என்ன சொல்ல போற இடத்துல கிட்ட சொல்றேன் என கண்ணம்மா சௌந்தர்யாவிடம் சொல்ல என்ன விஷயம் சொல்லு என கேட்கிறார்.
ஏன்னா எனக்கு பிறந்த குழந்தை என் வயித்துல பொறந்த இரண்டாவது குழந்தை என உண்மையைச் சொல்ல போறேன் என சொல்ல சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். நீ என்ன பண்ற யோசிச்சுத்தான் பண்றியா இதனால பிரச்சனை தீராது பெரிய பிரச்சனையாக மாறும் என சொல்கிறார். இத சொன்னா ஹேமாவுடன் மனசு எவ்வளவு கஷ்டப்படும் என யோசித்து தான் பேசுறயா என சொல்ல சின்ன பசங்க ஈஸியா எடுத்துப்பாங்க பெரியவங்க நாமதான் ஏத்துக்க கஷ்டப்படுவோம் என்று சொல்கிறார். இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே பொறுமையாக இருக்கிறது விஷயம் தெரியட்டும் என சொல்கிறார். எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் இருக்கு இல்ல என்ன சௌந்தர்யா சொல்ல ஒன்பது வருஷமா வராத நேரம் காலம் இனியா வர போது? என கண்ணம்மா சொல்கிறார்.
பிறகு பாரதிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன செய்வானு தெரியாது, அவன் ஹேமா தான் உலகம்னு இருக்கான் சௌந்தர்யா சொல்ல என்ன பண்ணுவாரு அவ வயித்துல பொறந்த குழந்தையை வளர்த்தோம்னு ஆசிட் ஊற்றி கழுவுவாறா? எந்த விஷயமும் சொன்னாலும் குழந்தைகளுக்கு எல்லா உண்மையும் தெரிய வந்து தான் ஆகணும். லட்சுமியோட அப்பா பாரதி நீ சொன்னா அப்போ நான் யார் என கேள்வி வரும். அப்போ ஹேமா என்னை எதுக்கு தூக்கி வந்து வளர்த்தீங்க என கேள்வி வரும்.
இந்த விஷயம் தெரிந்தால் அவர் ஹேமாவை என் கிட்ட விட்டுட்டு போனாலும் எனக்கு பிரச்சனை இல்லை. லட்சுமியும் ஹேமாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருப்பாங்க. இதனால் சொல்லத்தான் போகிறேன் என கண்ணம்மா உறுதியாக கூறி விடுகிறார்.
பிறகு கண்ணம்மாவுக்கு மேக்கப் போட்டு அவரை வெளியே அழைத்து வந்த பிறகு லட்சுமி கண்ணம்மாவை பார்த்துவிட்டு கட்டிப்பிடித்து அழுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.