பாரதியிடம் உண்மையைச் சொல்லுங்கள் பார்க்கலாம் என கண்ணம்மா கூற விழிபிதுங்கி நிற்கிறார் சவுந்தர்யா.
Bharathi Kannamma Episode Update 19.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஹேமாவை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் செல்கிறார் கண்ணம்மா. அங்கே சாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது கண்ணம்மா இதுவரைக்கும் உன் அம்மாவை பார்த்ததே இல்லையா என ஹேமாவை கேட்கிறார். அதற்கு ஹேமா இல்லை சமையல் அம்மா எனக் கூறுகிறார். உன் அம்மாவோட போட்டோ, ஒரு புடவை கூட பார்த்ததில்லையா என கேட்க அதெல்லாம் பார்த்தால் எனக்கு அம்மா ஞாபகம் வரும் என என் அப்பா கீழே போட்டு எரித்து விட்டார். நான் பிறந்த உடனேயே என் அம்மா சாமி கிட்ட போய் விட்டாங்க என கூறுகிறார். ஹேமாவின் பதிலைக் கேட்டு அதிர்ந்து போகிறார் கண்ணம்மா. லட்சுமியிடம் ஒருநாளும் நான் உங்க அப்பா இறந்துட்டாங்கனு சொன்னதில்லை. ஹேமா கிட்ட நான் எப்படி இறந்துட்டேன்னு சொல்லலாம்? அம்மாவிடம் நான் தான் உன் அம்மா என உண்மையைச் சொல்ல முயற்சி செய்கிறார் கண்ணம்மா.
கேரளா கனமழையில் 27 பலி : பிரதமர்- முதல்வர் துரித நடவடிக்கைப் பணி..
அந்த நேரத்தில் கோவிலுக்கு வந்த சௌந்தர்யா சமையல் அம்மா எனக் கூறி கண்ணம்மாவை தடுக்கிறார். பிறகு இருவரையும் விளையாட சொல்லிவிட்டு கண்ணம்மாவிடம் பேசுகிறார். நாலு நாள் டைம் கேட்டு இருந்தேன் அதுக்குள்ள நான் ஏதாச்சும் ஏற்பாடு செய்வேன். நீ எதற்கு ஹேமாவிடம் உண்மையை சொல்ல போன எனக் கேட்கிறார். என் பொண்ணு கிட்ட உண்மையை சொல்றதுல என்ன தப்பு? அவர் என்னடான்னா உங்க அம்மா இறந்துவிட்டார் என்று சொல்லி இருக்கார். நீங்களும் அதற்கு அமைதியா இருந்து அதற்கு ஆதரவு கொடுத்திருக்கீங்க? என் குழந்தையோட ஒரு அரை மணி நேரம் கூட நான் தனியாக இருக்க கூடாதா. எங்க நான் ஹேமாவிடம் உண்மையை சொல்லி விடுவேனோனு பதறியடித்து ஓடி வந்து இருக்கீங்க. ஏன் என்னை நிம்மதியாக வாழ விட மாட்றீங்க? ஓட ஓட விரட்டுறீங்க.. தொப்புள் கொடி ஈரம் காயறதுக்குள்ள என் குழந்தைய என்கிட்ட இருந்து பிரித்துட்டீங்க.
இயக்குனர் பேசுகையில் பாதியில் குறுக்கிட்டு நிறுத்திய Harish Kalyan
பாரதியிடம் உண்மையைச் சொல்ல வேண்டியது தானே? சொல்லித்தான் பாருங்க அதுக்கு பிறகு என்ன நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன். செத்துப் போய்விடுவான் என சவுந்தர்யா பதில் கூறுகிறார். அம்மாவே நம்பவைத்து ஏமாற்றிட்டாங்கனு என்னை விட்டு எங்கயாவது போய் விடுவான் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெறுகிறது.
பிறகு ஹேமாவைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்குச் செல்கிறார் சௌந்தர்யா. அங்கு பாரதி ஹேமாவிடம் ரெண்டு பேரும் தனியாக போய் விளையாடுங்க நான் சமையல் அம்மா கிட்ட பேசணும் பாட்டி சொல்லி இருப்பாங்களே எனக் கேட்க ஆமா அப்படியே சொல்றீங்க என கூறுகிறார். அதன்பிறகு ஹேமாவை அனுப்பி வைத்துவிட்டு சௌந்தர்யாவிடம் கண்ணம்மா எதற்கு அடிக்கடி இங்க வரா? நீங்க எதுக்கு கோயிலுக்கு போனீங்க?? அப்படி என்ன என் பேசனீங்க எனக் கேட்கிறார்.
அவ இரண்டாவது குழந்தைய தேடிக்கிட்டு கோவில் கோவிலா அலைஞ்சிட்டு இருக்கா. பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு எனக்கு ஒரு பாத்து நடந்துக்கங்க ஹேமா தான் இரண்டாவது பொண்ணுங்க சொன்னாலும் சொல்லுவா. அப்படி மட்டும் அவர் சொன்னார் நடக்கிறதே வேற. அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன். ஒரு நாள் அவர் வரும்போது என்னோட கோபம் எல்லை மீறி வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து வெளியே அனுப்புவேன் எனக் கூறிவிட்டு செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.