ஒரே நேரத்தில் ஜானகி மேடம், ராமன் சார் என இருவரும் உயிரை விட பாரதி முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மா மற்றும் நர்ஸ் ஒருவரிடம் ஜானகி மேடம் ஆபரேஷனுக்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லி பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் திடீரென ஜானகி குடும்பத்தார் ஓடி வந்து அம்மாவுக்கு மூச்சு திணறல் வந்து விட்டதாக கூறுகின்றனர். உடனே பாரதி உள்ளே ஓடிச்சென்று அவரை பரிசோதனை செய்து கொண்டிருக்க அவர் உயிரிழக்கிறார். இந்த விஷயத்தை பதில் அப்படியே ஜானகி மேடம் பக்கத்தில் சாய்ந்து உயிரை விடுகிறார். இதனால் ஒட்டுமொத்த மருத்துவமனையும் சோகத்தில் மூழ்கியது.

வீட்டுக்கு வந்த சௌந்தர்யா அகிலனிடம் ஜானகி மேடம் ராமன் சார் குறித்து பேசுகிறார். பாரதி அவரது வீட்டில் கண்ணம்மா அவரது வீட்டிலும் ஜானகி மேடம் பற்றி நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இருவரும் ஜானகி மேடமுக்கு கொடுத்த சத்தியத்தை எண்ணி பார்க்கின்றனர்.

அதன் பிறகு பாரதி கண்ணம்மாவுக்கு போன் செய்து நான் இன்னைக்கு ஹாஸ்பிடல்க்கு நீங்க சொல்லிட்டேன் நீயும் லீவு சொல்லிடு என ஜானகி அம்மா வாங்கிய சத்தியம் குறித்து பேசுகிறார் பாரதி. கண்ணம்மாவும் அவர்கள் என்னிடமும் சத்தியம் வாங்கினார்கள் என்ற விஷயத்தை சொல்கிறார். அவர்களுக்காக அவர்கள் செய்த சத்தியத்தை காப்பாற்றுவது தான் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என நினைக்கிறேன் என பாரதி கூறுகிறார். மேலே லட்சுமியிடம் பிக்னிக் போவதாக சொல்லிவிடு நானும் ஹேமாவிடம் அப்படித்தான் சொல்லப்போகிறேன் நீங்கள் இரண்டு பேரும் ரெடியா இருங்க நான் வந்து கூறுகிறேன் என பாரதி சொல்லி விட்டு தான் சொல்லி போனை வைக்க கண்ணம்மாவும் நன்றி கூறி போனை வைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.