வெண்பாவின் திட்டம் சொதப்பல் ஆகி உள்ளது.

Bharathi Kannamma Episode Update 16.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஸ்கூலுக்கு போன கண்ணம்மா படம் ஹேமா லட்சுமியுடன் பைதிமே வரவே மாட்டார் எங்க அப்பா அப்படி சொன்னார் என கேட்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

இந்த பக்கம் வெண்பாவின் திட்டத்தின்படி சாந்தி மீன் குழம்பு கையில் பணத்தை எடுத்துக்கொண்டு மாயாண்டி வீட்டிற்கு செல்கிறார். பணத்தைக் கொடுத்து சாந்தி உனக்காக ஆசையா மீன் குழம்பு வச்சு எடுத்துட்டு வந்திருக்கேன் என சொல்கிறார். உன்ன பார்த்ததுமே எனக்கு இந்த ஆசை வந்துவிட்டது ஆனால் அதை நானே உன்கிட்ட எப்படி சொல்றது? நீயும் புரிஞ்சிக்கல அதான் மீன் குழம்பு வச்சு எடுத்துட்டு வந்திருக்கேன் என சொல்லி சாப்பாட்டை பரிமாறுகிறார். ஆனால் வெண்பா மோசமான வில்லி என தெரிந்துகொண்ட மாயாண்டி அதை சாப்பிடாமல் சாந்தியை வெறுப்பேற்றி விட்டு பின்னர் அவருக்கு ஊட்டி விடுகிறார். இதை சாப்பிட்ட சாந்தி மயங்கிப் போய் விழுந்து விட அவரை தூக்கிக் கொண்டு அந்த மாயாண்டி வெண்பாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். இனிமே இந்த மாதிரி சென்ற தனமான விஷயங்களை செய்ய வேண்டாம் எனக் கூறுகிறார்.

அதன் பிறகு கண்ணம்மா வீட்டில் லட்சுமியை எதுக்கு தேவையில்லாத வேலை செஞ்சிட்டு இருக்கேன் வயதுக்கு மீறிய வேலை பார்க்காத எனத் திட்டுகிறார். ஸ்கூலுக்கு போகாமல் எதுக்கு பாரதி வீட்டுக்கு போன? என கேட்க லட்சுமி எதிர்த்துப் பேசத் தொடங்குகிறார். நீயும் எவ்வளவு நாளைக்குத்தான் என்ன ஏமாத்துவ. நீ கடைசி வரைக்கும் என் அப்பா யாரென்று சொல்ல போறது இல்ல. அதுக்காக என்னால சும்மா இருக்க முடியாது நான் எங்க அப்பாவ கண்டுபிடித்தே தீருவேன். அதை தடுக்கிற உரிமை யாருக்கும் கிடையாது என கட் அண்ட் ரைட்டாக பேசி விட்டு உள்ளே கிளம்பி விடுகிறார். லட்சுமி பேசியதெல்லாம் கேட்ட கண்ணம்மா திகைத்துப் போய் நிற்கிறார்.

இந்தப் பக்கம் ஹேமா கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு பாவியா அப்பா தனியா இருக்காரு சமையல் அம்மாவும் தனியா இருக்காங்க உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டா ரொம்ப நல்லா இருக்கும். எனக்கும் சமையல் அம்மாவைப் பிடிக்கும் அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். ஆனா லட்சுமியோட அப்பா வந்துட்டா என்ன பண்றது? ‌‌ அப்புறம் நடத்தி தப்பாயிடுமே எதுக்கும் பாட்டிகிட்ட கேட்டுட்டு முடிவு பண்ணலாம் என பேசிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்ட சௌந்தர்யா எதுவும் தெரியாதது போல உள்ளே வர அவரிடம் லட்சுமியோட அப்பா வருவாரா மாட்டாரா என கேட்க அவர் வரவே மாட்டார் என கூறி விடுகிறார். பிறகு உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ஆனா நான் அப்புறம் சொல்கிறேன் என சொல்லிவிட்டு ஹேமா எழுது சென்றுவிடுகிறார். இதைக் கேட்ட சௌந்தர்யாவின் கணவர் என்னை நீயே இப்படி சொல்லிட்ட என கேட்க குழந்தைகள் மூலமா ஒரு புது வழி பொறக்குது எல்லாம் நல்லதா நடக்கும் என நினைக்கிறேன் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.