கண்ணம்மா பெயரை சொல்லி பார்வையைத் தொடர்ந்து வெறுப்பேற்றி உள்ளார் ஹேமா.

Bharathi Kannamma Episode Update 15.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வீட்டில் சௌந்தர்யாவின் அவருடைய கணவரும் பாரதி செய்வதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். என்னாலதான் எதுவும் பண்ண முடியல நீங்களாச்சும் ஏதாவது செய்யுங்கள் என தனது கணவரிடம் கூறுகிறார் சௌந்தர்யா.

இந்த பக்கம் ஹேமா மேக்ஸ் போட்டுக் கொண்டிருக்க அதை தெரியாமல் திருதிருவென முழிக்க பாரதி அவருக்கு சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் ஹேமாவுக்கு சொல்லி புரியவில்லை. லட்சுமியுடன் நோட்ல ஒரே ஒரு சின்ன தப்பு கூட இருக்காது. சமையல் அம்மா அவ்வளவு ஈசியா சொல்லிக் கொடுப்பாங்க. நான் கூட ஒரு வாரம் அங்கு இருக்கும் போது எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. சமையல் அம்மாகிட்ட டியூஷன் போகவா என கேட்கிறார் ஹேமா.

நீருக்கடியில் கணவருடன் லிப் லாக்.. இணையத்தை அதிர வைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் புகைப்படம்.!!

பிறகு பள்ளியிலிருந்து வந்த ஹேமாவிற்கு பாரதி அவரையே செய்த தக்காளி சாதத்தை ஊட்ட ஹேமா நல்லாவே இல்லை என துப்பி விடுகிறார். எனக்கு தக்காளி சாதமும் பிடிக்காது பூண்டும் பிடிக்காது எனக்கு வேண்டவே வேண்டாம் என கூறுகிறார். சமையல் அம்மா சாப்பாடு தான் ரொம்ப சூப்பராக இருக்கும் என சொல்கிறார். பிறகு ஒரு பிறந்தநாள் பங்ஷனுக்கு போக வேண்டும் என சொல்லியிருந்தேன் என என் அம்மாவிடம் கேட்க மறந்துவிட்டேன் என கூறுகிறார். சரி டிரஸ் மாத்து என பாரதி சொல்ல நீங்களே ஒரு ட்ரெஸ்ஸை எடுக்க. பாரதி ஒரு என்ற டிரஸ்ஸை எடுத்துக் கொடுக்க இது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. சமையல் அம்மாவுக்குத்தான் எந்த டிரஸ் எனக்கு சூப்பராக இருக்கும் என தெரியும் என கூறுகிறார்.

ஆனா தொடர்ந்து சமையல் அம்மா குறித்து பேசிய அவர் கடுப்பாகி முதலில் கண்ணம்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார். மறுநாள் காலையில் அம்மா பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் சௌந்தர்யா சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்ல சொல்கிறார். நான் சாப்பாடு எடுத்துட்டு வந்தாலும் வரலைன்னாலும் சமையல் அம்மா எனக்கு கொண்டு வந்து விடுவாங்க எனக் கூறுகிறார். இன்னிக்கி சமையல் அம்மா வரமாட்டாங்க என சொல்கிறார் சௌந்தர்யா. பிறகு அஞ்சலி புதினா சாதம் உருளைக்கிழங்கு பொரியல் இருப்பதாக கூறுகிறார். சௌந்தர்யா சோகமாக இருப்பதை பார்த்த அம்மா என்ன என்று கேட்க பாரதி அந்த நேரத்தில் வந்து நீண்ட நாளாக இருக்க தலைவலி இன்னையோட சரியாக போகுது என கூறுகிறார்.

வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன்.. விஜய் அண்ணா செய்த உதவி – Vikranth Emotional

ஹேமா பள்ளிக்கு கிளம்பியதும் இன்னிக்கு கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து வாங்கி கொண்டு தான் வீட்டிற்கு வருவேன் என கூறுகிறார். நீங்க எல்லாம் இதையெல்லாம் பார்க்க கோர்ட்டுக்கு வர மாட்டீங்கனு எனக்கு தெரியும் என கூறுகிறார். கல்யாணத்தை தான் பாக்கல பிரிந்து செல்வதைப் பார்க்கிறோம் நாங்க கோர்ட்டுக்கு வருவோம் என சௌந்தர்யா சொல்கிறார். வீடு மாதிரி அங்க வந்துட்டு நியாய தர்மம் எல்லாம் பேசிட்டு இருக்காதீங்க என பாரதி கூறுகிறார்.

அனைவரும் கோர்ட்க்கு செல்ல நீதிபதியும் வந்து அமர்கிறார். ஆனால் கண்ணம்மா இன்னும் வரவில்லை. கண்ணம்மாவின் பெயர் உச்சரிக்கப்படும். சில நிமிடங்கள் கழித்தே அவர் கோர்ட்டிற்குள் நுழைகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.