வெண்பாவுக்கு உதவி செய்ய முடியாது என பாரதி கூற கண்ணம்மா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
Bharathi Kannamma Episode Update 13.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. சாந்தி பாரதிக்கு போன் செய்து ஜெயிலில் இருந்து வெண்பாவை வெளியே எடுக்க ஏற்பாடு செய்யச் சொல்லி கூறுகிறார். ஆனால் பாரதி வெண்பாவுக்கு எந்தவித உதவியும் நான் செய்ய முடியாது. உதவி செய்யச் சொல்லி எனக்கு போன் பண்ணாத. வெண்பா வெளியே வந்ததும் நான் இதைப் பற்றி பேசிக் கொள்கிறேன் என சொல்லி விடுகிறார்.
பிறகு சாந்திக்கு வெண்பா போன் செய்து பாரதியிடம் பேசினியா என கேட்க பேசினேன் ஆனால் அவர் உங்களுக்கு எந்தவித உதவியும் செய்ய முடியாது இது பற்றிப் பேச எனக்கு போன் பண்ணாத என சொல்லி விட்டார் என்று கூறுகிறார். வெண்பா பாரதியை துரோகி என திட்டுகிறார்.
இந்த பக்கம் கண்ணம்மா விவாகரத்து விஷயத்தில் என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஏதோ ஏதோ கவனத்தில் வேலையை மாற்றி மாற்றி செய்கிறார். ஆட்டோ டிரைவர் அண்ணா என்ன பிரச்சினை என கேட்டதற்கு பாரதி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பது பற்றி கூறி கண் கலங்குகிறார்.
இந்த பக்கம் பள்ளியில் லட்சுமி தன்னுடைய அப்பாவை நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். பள்ளிக்கு வந்த கண்ணம்மா நேராக ஹேமா பக்கத்தில் சென்று அமர்ந்து என்ன தனியா உட்கார்ந்து இருக்கே என கேட்க இன்னும் அப்பா வரல எனக் கூறுகிறார். உங்க அப்பாவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா என கேட்டதற்கு எங்க அப்பாவ ரொம்ப ரொம்ப பிடிக்கும். தாத்தா பாட்டியை பிடிக்குமா என கேட்க தாத்தா பாட்டியை பிடிக்கும் அதைவிட அப்பாவை ரொம்ப பிடிக்கும் என சொல்கிறார். அவங்க அப்பா மேல இவ்வளவு உயிரையே வெச்சுட்டு இருக்க ஹேமாவை ஒருபோதும் நான் பிரிக்க மாட்டேன். எனக்கு ஹேமா வேணும் தான் ஆனால் அவங்க அப்பாவோட சேர்ந்து வேணும் என முடிவெடுக்கிறார் கண்ணம்மா.
இந்தப் பக்கம் பாரதி லட்சுமி தனியாக இருப்பதை பார்த்து அவர் பக்கத்தில் அமர்ந்து என்ன ஏது என கேட்க அப்பாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன் என ஹேமா கூறுகிறார். உங்கப்பா தான் துபாயில இருக்கார்னு சொன்னியே என கேட்க அம்மா அப்படி பொய் சொல்லி இருக்காங்க. எங்க அம்மா வயித்துல நான் இருக்கும்போது எங்க அப்பா அவரை பிடிக்கலன்னு சொல்லிட்டாங்க. அதனால எங்கம்மா வீட்டை விட்டு வெளியே வந்துட்டாங்க. என்ன பத்தி கண்டிப்பா தப்பு தப்பா தான் சொல்லி இருப்பார் என எண்ணிக்கொண்டு பாரதி உங்க அப்பா அவ்வளவு கெட்டவரா எனக் கேட்க இல்ல எங்க அப்பா ரொம்ப நல்லவரு, எங்க அம்மாவும் நல்லவங்க தான் இரண்டு பேருக்கும் இடையில ஏதோ நடந்திருக்கு என கூறுகிறார்.
குரு பார்வை கோடி நன்மை : இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு
பிறகு கண்ணம்மா பாரதி காரில் கிளம்பும் போது அவரை ஒரு நிமிஷம் என நிற்க வைத்து உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என கூறுகிறார். என்ன என்கிட்ட கெஞ்ச போறியா என்ன சொல்ல நான் எதுக்கு கெஞ்சணும் என சொல்ல எதுவாக இருந்தாலும் கோர்ட்ல வந்து சொல்லு என கூறுகிறார் பாரதி.
அஞ்சலி மற்றும் அகிலன் பாரதி கண்ணம்மா விவாகரத்து செய்வது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் அஞ்சலி நாம ரெண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிரிவு வந்தா நீ என்ன பண்ணுவ என கேட்க அதெல்லாம் வராது நீ அழகா ஒரு குழந்தையை பெற்றுக் கொடுக்கப் போற அத கொஞ்சி கிட்டே வாழ்நாளை கழித்து விடலாம் என கூறுகிறார். இனிமே இந்த மாதிரி பேசாத என சொல்லிவிட்டு வெளியே செல்கிறார்.
கனமழையிலும் வசூல் சாதனை படைத்த Annaatthe – இத்தனை கோடி லாபமா?
ஜெயிலுக்குள் இருக்கும் வெண்பா பாரதி எதற்கு இப்படி சொல்லனும் நம்ப பண்ண பிராடு வேலை எல்லாம் அவனுக்கு தெரிஞ்சிடுச்சா? என புலம்பிக் கொண்டிருக்க இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.