கண்ணம்மாவுக்கு லட்சுமி சொன்ன விஷயம் அதிர்ச்சி கொடுக்க ஜானகி சொன்ன வார்த்தையால் சௌந்தர்யா தவிக்க தொடங்கி உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான செய்திகள் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் கண்ணம்மா வெளியே சென்று வந்த பிறகு லட்சுமி இன்னைக்கு உன்னை லாரி மாதா வந்திருக்குமா என கேட்க ஆமா உனக்கு யாரு சொன்னது என்ன கேட்கிறார் கண்ணம்மா. உடனே லட்சுமி ஹேமா தான் சொன்னா அவளுக்கு உன் பேரு கண்ணம்மா என்று இன்னைக்கு தான் தெரியுமா பாட்டி தெரிஞ்சுகிட்டு இருக்கா என சொல்ல கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். உடனே சௌந்தர்யாவுக்கு போன் போட்டு இந்த விஷயம் பற்றி கூறுகிறார்.

அதன் பிறகு வீட்டில் ரோஹித் கண்ணம்மாவை மோத வந்த லாரி யாருடையது அது எதிர்பாராத விதமா நடந்ததா இல்ல திட்டமிட்டு கொலை செய்ய நடந்ததா? என தன்னுடைய நண்பர்கள் மூலமாக கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இந்த விஷயம் அறிந்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

ஹாஸ்பிடலில் ஜானகி குடும்பத்தார் அனைவரும் வந்திருக்க ஃபேமிலி யூனியன் பங்க்ஷன் நடக்கிறது. பிறகு சௌந்தர்யா வேணு உள்ளிட்டோர் ஜானகி மேடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தன்னுடைய குடும்பத்தாரை சந்தித்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு என சொல்லும் ஜானகி உனக்கு இந்த கொடுப்பினை கிடைக்கல என சௌந்தர்யாவிடம் சொல்லி பாரதி மனைவியை பிரிந்து வாழ்வதாக சொன்னதையும் கண்ணம்மா கணவனை பிரிந்து வாழ்வதாக சொன்னதையும் கூறுகிறார்.

எனக்கு தெரிஞ்சு பாரதி மேல எந்த தப்பும் இருக்காது அவன் அவங்க தங்கமான பையனா இருக்கான் உன் மருமகன் மேல தான் தப்பு இருக்கும் அவள நீ கூட்டிட்டு வா. அவகிட்ட நான் பேசி புரிய வைக்கிறேன் என சொல்ல சௌந்தர்யா என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.